இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Thursday, September 16, 2021

பாலியல் தொல்லை / பகிடிவதை

இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 1995ம் ஆண்டின் 22ம் இலக்க திருத்தத்திற்கமைவாக பிரிவு 345 மற்றும் கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வடிவங்களிலமைந்த வன்முறைகளை தடுப்பதற்கான 1998ம் ஆண்டின் 20ம் இலக்கச் சட்டம் ஆனது பாலியல் தொல்லை பற்றி கூறுகின்றது.

இத்தகைய பாலியல் தொல்லையானது,

உடல் ரீதியாகவும், சொல் ரீதியாகவும், சைகை ரீதியாகவும், ( சைகை எனும் போது – உற்றுப்பார்த்தல், காமப் பார்வை, நாக்கை நீட்டிக் காட்டல், உதடுகளை நக்கல் போன்ற பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய செயல்களை செய்தல்.)

கட்புலன் சார்ந்த வகையிலும் இடம்பெறலாம்.

(கட்புலன் சார்ந்தது எனும் போது உதாரணமாக பின்வருவன உள்ளடக்கப்படும். உடற் பாகங்களை வெளிப்படுத்தி காண்பித்தல், அந்தரங்க உறுப்புக்களை தொடுதல், வேண்டத்தகாத மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், பாலியல் நகைச்சுவைகள பதிவிடல், மறைவான ஓளிப்பதிவுக் கருவிகளை பொருத்தல், மறைமுக காட்சிகளை காணொளியாக எடுத்தல் போன்றன..)

இத்தகைய தொல்லைகளானது பல இடங்களிலும் அமையலாம் இதில் பிரதானமாக தொழில் புரியும் இடம் மற்றம் கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றது.

தண்டனைகள் - 

தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 345இ

No comments:

Post a Comment

Blog Archive